\

22 vows of Dr. Babasaheb Ambedkar in Tamil

1) “நான் பிரம்மா ,விஷ்ணு ,சிவன் ஆகியோரை கடவுளாக ஏற்க மாட்டேன். அவர்களைக் கடவுளாக வணங்க மாட்டேன்.

2) இராமனையோ ,கிருஷ்ணனையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன். அவர்களைக் கடவுளாக வழிபடவும் மாட்டேன்.

3) கவுரியையோ, கணபதியையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன். அவர்களைக் கடவுளாக வழிபடவும் மாட்டேன்.

4). கடவுள்களின் அவதாரத் தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

5) புத்தரை, விஷ்ணுவின் அவதாரம் என்பது பொய் மற்றும் விஷமத்தனமான பிரச்சாரம்.

6) சிரார்த்தம் (இறந்து போன உறவினரின் பாதுகாப்புக்காகச் செய்யப்படும் சடங்கு ) கொடுப்பது, கடவுளுக்குக் காணிக்கை கொடுப்பது ஆகிய செயல்களில் எப்போதும் ஈடுபடவே மாட்டேன்.

7) பௌத்தத்திற்குக் கேடு விளைவிக்கும் எச்செயலிலும் ஈடுபட மாட்டேன்.

8) பிராமணர்கள் செய்ய வேண்டிய எந்த சடங்குகளையும் நான் செய்ய மாட்டேன்.

9) எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்று நான் நம்புகிறேன்.

10) நான் சமத்துவத்தை நிலைநாட்ட அயராது உழைப்பேன்

11) புத்தர் வகுத்து கொடுத்த எண்வழி மார்க்கப் பாதையில் பயணிப்பேன்.

12)புத்தர் கூறியப்படி முழு நிறைவாக்கும் பத்து நல்லொழுக்கங்களை தவறாது கடைபிடிப்பேன்.

13) எல்லா உயிர்களிடத்தும் இரக்கத்தோடும், அன்போடும் இருப்பேன்.

14) நான் திருட மாட்டேன்.

15) நான் பொய் சொல்ல மாட்டேன்

16) நான் பாலியல் தொடர்புடைய தவறுகளில் ஈடுபட மாட்டேன்.

17) நான் மது அருந்த மாட்டேன்.

18) பௌத்தத்தின் அடிப்படை கொள்கைகளான மெய்யறிவு , அறநெறி ,கருணை ஆகியவற்றை பின்பற்றி வாழ்வேன்.

19)சமத்துவமின்மையையே அடிப்படையாக கொண்டு மானுடத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் மானுட முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு தடையாகவும் உள்ள இந்து மதத்தை விடுத்து நான் பௌத்தத்தை ஏற்கிறேன்.

20) பௌத்தமே சரியான நன்னெறி என நான் முழுமையாக நம்புகிறேன்.

21) பௌத்தத்தை உளமார ஏற்றதால் நான் புதுப் பிறப்பெடுக்கிறேன்.

22) இன்று முதல் புத்தருடைய கருத்துக்கள் வழி வாழ்வேன் என்று சூளுரைக்கிறேன்.

Open chat
1
Jay Bhim, How can I help you?